| |
| |
தமிழ் பழமொழிகள்
- அகத்தினழகு முகத்தில் தெரியும்.
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
- அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
- அடியாத மாடு படியாது.
- அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
- அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
- அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
- அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
- அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
- அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
- அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
- ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
- ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
- ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
- ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
- ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
- ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
- ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
- ஆழம் தெரியாமல் காலை விடாதே.
- ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
- ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
- ஆனைக்கும் அடிசறுக்கும்.
- இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
- இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
- உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
- எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
- எறும்பூரக் கல்லும் தேயும்.
- ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக்
கோபம்.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
- கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
- கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
- கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
- கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
- கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
- கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பத
| |